பெரிதாய் எந்த திட்டமிடல்களும்
இல்லாத ஒரு சாமனியனின் வாழ்க்கையில்
ஒரு நாள் யட்சி நுழைந்தாள்.
எளிதில் உணர்ச்சிவசப்படுவனாகவும்
அதன் பொருட்டு வருந்துபவனும்
இருந்த போது ,
யட்சியோ அதன் மறுகரையில் இருந்தாள்.
ஒரு வழிகாட்டியை போல் அவள்
தன் பாதையில் அழைத்து சென்றாள்.
எல்லா அசாதாரணமான விஷயங்களும் அவளுக்கு சாதரணமாய் இருந்தது.
என் வாழ்வில் இத்தனை
குழப்பங்கள் நிறைந்த ஒரு பெண்ணை
இப்போது தான் பார்க்கிறேன் என்று நினைத்த போது உலகம் அவள் தெளிவிற்காக
கொண்டாடி கொண்டிருந்தது.
கானகங்களில் அலைந்து
கொண்டிருந்த போது அவள்தான்
நகரத்திற்கு அழைத்து வந்தாள்.
மழைதுளிகள் ஒலி எழுப்ப தொடங் கிய
அவள் குரல் கேட்க தொடங்கும்.
ஒரு நடு இரவில் அழுது கொண்டிருந்த
போது அவள் Smiley கள் அனுப்பி வைத்தாள்.
நட்சத்திரங்களை எண்ணிய நாட்களில்
அவள் என் கூட இருந்தாள்.
அன்பை அதன் அத்தனை பரிணமாங்களிலும்
உணர்த்தியவளை புரிந்து கொள்ள
முயற்சிப்பதை விட்டுவிட்டு நேசிக்கத்தொடங்கிவிட்டேன் .
ஒரு நாள் யட்சி நுழைந்தாள்.
எளிதில் உணர்ச்சிவசப்படுவனாகவும்
இருந்த போது ,
யட்சியோ அதன் மறுகரையில் இருந்தாள்.
ஒரு வழிகாட்டியை போல் அவள்
தன் பாதையில் அழைத்து சென்றாள்.
எல்லா அசாதாரணமான விஷயங்களும் அவளுக்கு சாதரணமாய் இருந்தது.
என் வாழ்வில் இத்தனை
குழப்பங்கள் நிறைந்த ஒரு பெண்ணை
இப்போது தான் பார்க்கிறேன் என்று நினைத்த போது உலகம் அவள் தெளிவிற்காக
கொண்டாடி கொண்டிருந்தது.
கானகங்களில் அலைந்து
கொண்டிருந்த போது அவள்தான்
நகரத்திற்கு அழைத்து வந்தாள்.
மழைதுளிகள் ஒலி எழுப்ப தொடங் கிய
அவள் குரல் கேட்க தொடங்கும்.
ஒரு நடு இரவில் அழுது கொண்டிருந்த
போது அவள் Smiley கள் அனுப்பி வைத்தாள்.
நட்சத்திரங்களை எண்ணிய நாட்களில்
அவள் என் கூட இருந்தாள்.
அன்பை அதன் அத்தனை பரிணமாங்களிலும்
உணர்த்தியவளை புரிந்து கொள்ள
முயற்சிப்பதை விட்டுவிட்டு நேசிக்கத்தொடங்கிவிட்டேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக