சஞ்சாரமற்ற ஓர் அடர்வனம் தீப்பிடிக்கிறது .
அந்தியில் நட்சத்திரம்
மறைந்து தீப்பிழம்பு காடெங்கும்
சாம்பல் பரப்புகிறது.
வெடித்து கிளம்பும் சுள்ளிகள் புகை
நடுவே நடனம் புரிகின்றன.
பெறுங்காற்று காடு முழுவதையும்
தின்ன கொடுக்கிறது.
பொருளற்ற சத்தங்கள்
திசையெங்கும் ஒலிக்கிறது.
ஆர்ப்பரிக்கும் நெருப்பில்
மரண ஓலங்கள்
காணமல் போயிருந்தது.
வீடு திரும்பும் பறவைகள்
வீட்டை தொலைத்து விட்டிருந்தன.
விடியலில் மழை பெய்து,
தீ உயிர்விடுகிறது.
இரண்டு திங்களில்
எரிந்த மரக்களைகளில் தளிர் எட்டிபார்க்க
நகரமயமாக்கலில் எஞ்சியிருக்கும்
கடைசி வனம்
புதுயுகத்தை ஆரம்பிக்கிறது.
அந்தியில் நட்சத்திரம்
மறைந்து தீப்பிழம்பு காடெங்கும்
சாம்பல் பரப்புகிறது.
வெடித்து கிளம்பும் சுள்ளிகள் புகை
நடுவே நடனம் புரிகின்றன.
பெறுங்காற்று காடு முழுவதையும்
தின்ன கொடுக்கிறது.
பொருளற்ற சத்தங்கள்
திசையெங்கும் ஒலிக்கிறது.
ஆர்ப்பரிக்கும் நெருப்பில்
மரண ஓலங்கள்
காணமல் போயிருந்தது.
வீடு திரும்பும் பறவைகள்
வீட்டை தொலைத்து விட்டிருந்தன.
விடியலில் மழை பெய்து,
தீ உயிர்விடுகிறது.
இரண்டு திங்களில்
எரிந்த மரக்களைகளில் தளிர் எட்டிபார்க்க
நகரமயமாக்கலில் எஞ்சியிருக்கும்
கடைசி வனம்
புதுயுகத்தை ஆரம்பிக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக