ஞாயிறு, 28 ஜனவரி, 2018

யட்சிக்கு

அந்தி மறையும்  சூரியன் தன்
கிரணங்களை பூமியில் விட்டு
சென்றதென அறிந்தவர்கள் அவள் 
புன்னகையை பற்றி தான்
பேசியிருக்க  கூடும்.

காலத்தில் தனித்திருக்கும் 
தேவதையின் சிரிப்பு
இந்த பிரபஞ்சம் எங்கும்
வியாபித்திருக்கிறது.

யுகங்களுக்கு பின்னும் 
யட்சியின் குரலை இன்னும் காடு  பிரித்தெடுக்கவில்லை.

அவள் புன்னகை  வேண்டி மழை
மேகத்தை பார்க்கிறவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.

காற்றின் சாரலில் சிந்தியிருக்கும் 
கடைசி புன்னகையை  தேடி
சென்றவர்கள் திரும்பவில்லை.

வனம் திரும்பும் யட்சிக்கு
புன்னகைப்பதற்கென தனி 
காரணங்கள் எதுவும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக