அப்போது அவர்கள் அங்கிருந்தார்கள்.
ஒருக்கணம் அவர்கள் மட்டுமே இருந்தார்கள்.பூமிக்கும் வானிற்கும் நடுவே நின்றார்கள்.பெருக்கெடுத்து பெய்கிற மழைநீரை தாங்கி நிற்கிற இலையை ப்போல் அவர்கள் அன்பு வழிந்தோடிக்கொண்டிருந்தது.
காற்றின் காணாத தீவிரம் போல் அதோடு இசைந்தாடினார்கள்.
மழைக் காலத்து கிணற்றை போல்
அன்பு பெருகி கொண்டிருந்தது.
சுற்றுகிற உலகோடு இல்லாமல் இருந்தார்கள்.அதன்
பிரியத்தை எல்லாத்திசைகளிலும் உணர்பவர்களாக இருந்தார்கள்.
அங்கே மொளனம் நிலை கொண்டிருந்தது.
கடைசியில் கானகத்தில் விடப்பட்டு காதலில் தொலைந்தார்கள்.
அவர்கள் திரும்பி வரவில்லை.
அவர்களை எதிர்பார்க்கிறவர்களும் இல்லை.
கடல் நுரைகளை கொண்டு வேலி அமைத்து கொண்டார்கள்.
அங்கு தனிமை இல்லை
அவர்கள் இருந்தார்கள்.
காதல் இருந்தது.
நில்லாது ஓடிக்கொண்டிருக்கிற அருவியோடு காலத்தில் ஓடிக்கொண்டிருந்தார்கள்.
தடுப்புகள் இல்லா சுதந்திரத்தை உணர்ந்தவர்கள் திரும்பவில்லை.
பின்தொடரவில்லை.
அவர்கள் ஆரம்பித்தது மொளனத்தை அதனை உணரந்தவர்கள் அவர்கள் உலகிற்கு வரவில்லை.
அவர்கள் எல்லைகள் இன்னும் அதிகமாகி கொண்டே இருக்கிறது.
ஒருக்கணம் அவர்கள் மட்டுமே இருந்தார்கள்.பூமிக்கும் வானிற்கும் நடுவே நின்றார்கள்.பெருக்கெடுத்து பெய்கிற மழைநீரை தாங்கி நிற்கிற இலையை ப்போல் அவர்கள் அன்பு வழிந்தோடிக்கொண்டிருந்தது.
காற்றின் காணாத தீவிரம் போல் அதோடு இசைந்தாடினார்கள்.
மழைக் காலத்து கிணற்றை போல்
அன்பு பெருகி கொண்டிருந்தது.
சுற்றுகிற உலகோடு இல்லாமல் இருந்தார்கள்.அதன்
பிரியத்தை எல்லாத்திசைகளிலும் உணர்பவர்களாக இருந்தார்கள்.
அங்கே மொளனம் நிலை கொண்டிருந்தது.
கடைசியில் கானகத்தில் விடப்பட்டு காதலில் தொலைந்தார்கள்.
அவர்கள் திரும்பி வரவில்லை.
அவர்களை எதிர்பார்க்கிறவர்களும் இல்லை.
கடல் நுரைகளை கொண்டு வேலி அமைத்து கொண்டார்கள்.
அங்கு தனிமை இல்லை
அவர்கள் இருந்தார்கள்.
காதல் இருந்தது.
நில்லாது ஓடிக்கொண்டிருக்கிற அருவியோடு காலத்தில் ஓடிக்கொண்டிருந்தார்கள்.
தடுப்புகள் இல்லா சுதந்திரத்தை உணர்ந்தவர்கள் திரும்பவில்லை.
பின்தொடரவில்லை.
அவர்கள் ஆரம்பித்தது மொளனத்தை அதனை உணரந்தவர்கள் அவர்கள் உலகிற்கு வரவில்லை.
அவர்கள் எல்லைகள் இன்னும் அதிகமாகி கொண்டே இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக