ஞாயிறு, 28 ஜனவரி, 2018

மூன்று கனவுகள்

மூன்று தொடர்ச்சியான  கனவுகள்.
எல்லாக் கனவுகளில் யாரோ இருக்கிறார்கள் அல்லது நான் இருக்கிறேன்.நெடு மரங்கள் வளர்ந்த மலைப்பாதையில் பழங்கால ஜீப்
ஒன்று சென்று கொண்டிருக்கிறது. அதை பின் தொடரும்  ஒரு வண்டியில் நான்  இருக்கிறேன்.

மரங்களின் நடுவே ஒரு  பறவை எங்களை பார்த்து கொண்டே பறக்கிறது.இல்லை அப்படி தோன்றுகிறது.மெல்ல மேலேறி மரங்களை விட்டு ஆகாயத்திற்கு போகிறது.

இலைகள் காற்றில் அசைகிறது.
நாங்கள் வண்டியில் இருக்கிறோம்.
பறவை காணாமல் போகிறது.

இப்போது பக்கத்தில் பறவை தெரிகிறது.பள்ளத்தில்
ஜீப் கவிழ்ந்து கிடக்கிறது.
நான் ஆகாயத்தில் இருக்கிறேன்.

.

மழை பெய்கிறது.
யாருமற்ற குளத்தின் கரையில்
ஒருவன் அமர்ந்திருக்கிறான்.
அது நான் என தெரியவில்லை.
அவன் கைகள் இறுக்க கட்டியிருக்கிறது.
மழை அவன் மீதும் பெய்கிறது.

இடி இடிக்கிறது.
ஒரு பூ தண்ணீருக்குள் செல்கிறது.
தாமரை இலையில் திட்டு திட்டாக தண்ணீர் நிற்கிறது. படிக்கட்டுகளின் மூழ்க தொடங்குகிறது. மழை ஒரே ரீங்காரமாக இசைக்கிறது.

அவன் அங்கேயே இருக்கிறான்.
மழை நிற்கவில்லை.
.
அகண்ட நதியின் குறுக்கே
அணை ஒன்று கட்டப்படுகிறதது.
வெகுவேகமாக வரும் தண்ணீர் நிற்கிறது. மனிதர்கள் அடித்து கொள்கிறார்கள். மதகுகளின் வெளியே வரும் தண்ணீரில் இரத்தம் கலந்திருக்கிறது.

விண்வெளியில் இருந்து
பூமி முழுக்க தண்ணீராக இருக்கிறது.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக