ஞாயிறு, 28 ஜனவரி, 2018

வேதாளம் சொன்ன கதை

வேதாளம் தோளில் ஏறி மூன்று
வருடங்களாகி விட்டது.
ஒவ்வொரு முறையும் வளர்ச்சி
கதை சொல்லும்.
தவறான பதில்களுக்கு கலவரமும்
சரியான பதில்களின் போது
வெளிநாட்டிற்கும் செல்லும்.

வேதாளத்தின் முதல் கதை
பணத்தாள்களை வெற்று தாளாக்கி
ஆரம்பித்தது.
வேதாளத்தின் அடிமைகள்
புது இந்தியா பிறந்ததாக ஆர்ப்பரிக்க
மக்கள் தலையை பிய்த்து தெருவில் அலைந்து கொண்டிருந்தனர்.

வேதாளத்தின் அடுத்த கதை
குடிமக்களுக்கு அடையாள எண்
கொடுப்பதாக ஆரம்பித்தது.
மக்கள் எண்களாக மாற்றம்பெற
அஃறினை போல் அலைய
வேதாளத்தின் அடிமைகள் வளர்ச்சி வளர்ச்சி என்று கூவின.

வேதாளத்தின் மூன்றாம் கதை
இந்தியை நடுவீட்டிற்கு அழைத்து வருவதாக ஆரம்பித்தது.நடுவிட்டில் உட்கார வைப்பதை சரிகட்ட  பெருச்சாளிகளை விட்டு தேர்வு செய்யும் நீட்டை கொண்டுவந்தது.
இந்தி தின்று வளர்ந்த பெருச்சாளிகள்
எல்லா இடத்திலும் நாட்டாமை செய்ய
முனைந்தன.

வேதாளத்தின் நான்காம் கதை
வரியில்லா வரி.
புதியா இந்தியா அடுத்தடுத்து பிரசவித்து தள்ளாட தொடங்கியிருந்தது.
போட்டோஷாப் செய்யப்பட்ட விலைபட்டியோடு வேதாளத்தின் அடிமைகள் நகரை சுற்றி வந்தன.

வேதாளத்தின் அடுத்த கதை
ஆரம்பிப்பதற்கு முன்
கையில் வைத்திருந்த ரேசன் கார்டை பிடிங்கி கொண்டது.
அடிமைகள் அலறல் இன்னும் குறையவில்லை.

வேதாளம் இப்போது தோளில்
இருந்து கழுத்தை இருக்க தொடங்கியிருக்கிறது.

அது கதை சொல்வதை நிறுத்த போவதில்லை.
அதன் கதைகள் நாளுக்கு நாள்
கொடூரமாகி கொண்டே வருகிறது.

இரண்டு ஆண்டுகள் முடியும் போது
பிணங்களும் வேதாளங்களும் மட்டுமே இங்கு  இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக