ஞாயிறு, 28 ஜனவரி, 2018

கட்டி முடிக்கப்படாத பாலம்

இடிந்து விழுந்து கொண்டிருக்கும் பாலத்தின்  ஒரு  முனையில் இருக்கிறேன். கடைசி நேர மன்னிப்புகளும்  சமாதனங்களும் பலனின்றி உடைய ஆரம்பித்திருக்கிறது.
நம்பிக்கைகளும் நட்புமான ஒரு
நாளில் தான் நாங்கள் இந்த
பாலத்தை உருவாக்கினோம்.
இரு வேறுமுனையில் இருக்கும்  எங்களுக்குள்  நட்பை இந்த  பாலம்
பறிமாற்றிக்கொண்டிருந்தது.
எல்லைகளற்ற  அன்பு  எப்போதும்  பாலத்தை  உயிர்ப்புடன்  வைத்திருந்தது.
சிறு சண்டையின்  நீட்சியாய்
பேசாமல் இருந்த  நாளில்,
பாலத்தின்  முதல்  செங்கல் விழுந்தது.
விளக்கங்களை சொல்ல வாய்ப்புகள்  அளிக்காத  நொடிகளில்  பாலம் 
ஆட்டம்  காண  ஆரம்பித்தது.
வெறுப்புகளும் புறக்கணிப்புகளாமான ஒரு நம்பிக்கையற்ற
கணத்தில்  பாலம்  இடிந்து விழத்தொடங்கியது.
கண்முன்  எதிர்பக்கம்  சரிந்து
விழுந்து  கொண்டிருக்க ,
கொஞ்சம்  பூங்கொத்துகளையும்.. கொஞ்சம்  மன்னிப்புகளையும் ..
கொஞ்சம்  நட்பையும்
சேர்த்து  வைத்து காத்திருக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக