சனி, 27 ஜனவரி, 2018

கண்ணம்மா

தேவ காணம் ஒலிக்கிறது.
இசை உலகிற்கு புது வரவு.
உலகின் எல்லா இசையும் நிற்கிறது.
அவள் பாட தொடங்குகிறாள்.
இசை உயிர் பெற்று அவளை தேடி வருகிறது. காற்றில் கலந்த ஓசை
எங்கும் எதிரொலிக்கிறது.
சிலுசிலுத்து தொடங்கும் குரல்
மெல்ல குழைகிறது; பின்
கட்டைளையிடுகிறது.
அதுவே இசையாகிறது.
இசைக்கோர்ப்பை பறவைகள்  எடுத்துகொணடு விடுகின்றன.
பிரபஞ்சம் ரசிகனாக
காலம் அவள் துயில் எழும்ப காத்திருக்கிறது.
அவள் பாடுகிறாள்.
மழை வருகிறது.
பிரளயம் ஏற்பட்டு
எல்லாரும் இறக்கிறார்கள்.
அவள் பாடுகிறாள்
மழை நிற்கிறது.
எல்லாருக்கும் உயிர் வருகிறது.
அவள் பாடுகிறாள்
தேசங்கள் அழிந்து ஆதி பூமி உருவாகிறது.
அவள் பாடுகிறாள்
உலகின் முதல் உயிர்
தோன்றுகிறது.
பாடுவதை நிறுத்துகிறாள்.
பிரபஞ்சம் வெடிக்க ஆரம்பிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக